pallivasalmurasu.bsky.social
@pallivasalmurasu.bsky.social
3 followers 1 following 2.7K posts
Posts Media Videos Starter Packs
நாடு முழுக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ₹3,000 பிஎஃப் கணக்கில் வரவு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் பல லட்சம் ஊழியர்களின் EPFO (Employees’ Provident Fund Organisation) கணக்குகளில் ₹3,000 தொகை ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. புதியதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக,…
நாடு முழுக்க லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ₹3,000 பிஎஃப் கணக்கில் வரவு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
நாடு முழுவதும் பல லட்சம் ஊழியர்களின் EPFO (Employees’ Provident Fund Organisation) கணக்குகளில் ₹3,000 தொகை ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. புதியதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக, நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் EPFO கணக்குகள் தொடங்கப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPFO-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் மாதத்தில் EPFO-வில் புதிதாக இணைந்த உறுப்பினர்களின் கணக்குகளில் குறைந்தபட்சம் ₹3,000 தொகை மத்திய அரசால் செலுத்தப்படும்
pallivasalmurasu.wpcomstaging.com
தெரு நாய்க்கடி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம்!

தெரு நாய்க்கடி பிரச்சனையைச் சுற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருந்தன. இதையடுத்து, அந்த மாநிலங்களின் தலைமைச்…
தெரு நாய்க்கடி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம்!
தெரு நாய்க்கடி பிரச்சனையைச் சுற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருந்தன. இதையடுத்து, அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கிணங்க, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். முன்னதாக தலைமைச் செயலாளர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரியிருந்தாலும், அதனை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
Gold Rate Today: தங்கம் விலை தாறுமாறு! சென்னையில் 91 ஆயிரத்தை நெருங்கிய கோல்டு!

சென்னை: தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 3) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350-க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சிறிய அளவில்…
Gold Rate Today: தங்கம் விலை தாறுமாறு! சென்னையில் 91 ஆயிரத்தை நெருங்கிய கோல்டு!
சென்னை: தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 3) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350-க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை (03.11.2025): ஒரு கிராம் தங்கம்: ரூ.11,350 ஒரு சவரன் தங்கம்: ரூ.90,800 வெள்ளி: கிராமுக்கு ரூ.168, கிலோக்கு ரூ.1,68,000 தங்க விலை மாற்றங்கள் (நவம்பர் 1 முதல்):
pallivasalmurasu.wpcomstaging.com
அதிர்ச்சி தகவல்: இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்களில் முதலிடத்தை பிடித்த மதுரை!

இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்கள் பட்டியலில், மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25 ஆய்வின் அடிப்படையில்…
அதிர்ச்சி தகவல்: இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்களில் முதலிடத்தை பிடித்த மதுரை!
இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்கள் பட்டியலில், மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25 ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில், மதுரை முதலிடத்தில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா இரண்டாம் இடத்தில், சென்னை மூன்றாம் இடத்தில், ராஞ்சி, பெங்களூர், மும்பை, ஸ்ரீநகர், டெல்லி ஆகிய நகரங்கள் பின்னர் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியல் இந்தியாவின் நகரங்களின் சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
pallivasalmurasu.wpcomstaging.com
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை: சபரிமலையில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அல்லது 17ம் தேதிகளில் மண்டல…
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சென்னை: சபரிமலையில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அல்லது 17ம் தேதிகளில் மண்டல பூஜை தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 14 அல்லது 15ம் தேதிகளில் மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இந்த இரண்டு காலங்களிலும் சபரிமலைக்கு நாடு முழுவதும் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதால், கூடுதல் ரயில்களின் தேவை ஏற்படுகிறது. சிறப்பு ரயில் விவரங்கள்: வண்டி எண் 06111 / 06112: நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.
pallivasalmurasu.wpcomstaging.com
அமெரிக்கர்களை பதறவிடும் பிரம்மாண்ட முருகன் சிலை… கரோலினாவில் கட்டப்படும் கோவிலால் பரபரப்பு!

நியூயார்க்: அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில் உலகின் மிக உயரமான முருகன்…
அமெரிக்கர்களை பதறவிடும் பிரம்மாண்ட முருகன் சிலை… கரோலினாவில் கட்டப்படும் கோவிலால் பரபரப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில் உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்திடும் புனித தலமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதேசமயம், சில அமெரிக்க சமூக வட்டாரங்களில் இந்தக் கோவில் திட்டம் மீது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கோவில் திட்டத்தின் பின்னணி:2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் தலைமையில் வேகமாக முன்னேறி வருகிறது. வட கரோலினா மாநிலத்தின் மோன்கூர் நகரில்
pallivasalmurasu.wpcomstaging.com
“உங்க வெற்றியால் தலைமுறையே மாறப் போகுது..” உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து!

மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டெங்கும் மகிழ்ச்சி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி,…
“உங்க வெற்றியால் தலைமுறையே மாறப் போகுது..” உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து!
மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டெங்கும் மகிழ்ச்சி அலைகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் தாதா சச்சின் டெண்டுல்கர், ஜாவலின் சாம்பியன் நீரஜ் சோப்ரா, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வரலாற்று வெற்றி:ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு அடுத்து, ஒருநாள் மகளிர் உலகக்கோப்பையை வென்ற …
pallivasalmurasu.wpcomstaging.com
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3! — பலி, காயமடைந்தோர் பற்றிய தகவல் வெளியீட!

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மசார்-இ-ஷெரிஃப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டத சுமார் 5.23…
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3! — பலி, காயமடைந்தோர் பற்றிய தகவல் வெளியீட!
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மசார்-இ-ஷெரிஃப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டத சுமார் 5.23 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரில், நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட பேரிடர் நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 35 பேர் கைது! இலங்கை கடற்படை அராஜகம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழகத்தையும் புதுச்சேரியையும் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகையும் இலங்கை கடற்படை…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 35 பேர் கைது! இலங்கை கடற்படை அராஜகம்
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழகத்தையும் புதுச்சேரியையும் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி:தமிழக கடற்கரையோர மீனவர்கள் நீண்டநாளாக இலங்கை கடற்படையினரின் துன்புறுத்தலால் அவதியுறுகின்றனர். இதேநேரத்தில், இலங்கையில் சமீபத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருப்பதால், மீனவர் பிரச்சனைக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவியது.
pallivasalmurasu.wpcomstaging.com
🏆 மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி — முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

நவிமும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அணி வரலாற்று சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தை…
🏆 மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி — முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
நவிமும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அணி வரலாற்று சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 13வது மகளிர் உலகக் கோப்பை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இதில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது. நேற்று டி.ஒய். பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அசத்தலான ஆட்டத்துடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்தது.
pallivasalmurasu.wpcomstaging.com
IND vs SA: வரலாறு படைத்த ஸ்மிருதி – ஷஃபாலி ஜோடி… உலகக்கோப்பை இறுதியில் புதிய மைல்கல்!

நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்றை படைத்த நிலையில், தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி ஒரு அபூர்வமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மகளிர்…
IND vs SA: வரலாறு படைத்த ஸ்மிருதி – ஷஃபாலி ஜோடி… உலகக்கோப்பை இறுதியில் புதிய மைல்கல்!
நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்றை படைத்த நிலையில், தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி ஒரு அபூர்வமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளின் வரலாற்றில், தொடக்க விக்கெட்டுக்காக 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இரண்டாவது ஜோடியாக இவர்களே திகழ்கிறார்கள். போட்டியின் முக்கிய தருணங்கள்:நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்தில் சிறிது அழுத்தம் இருந்த போதிலும், ஸ்மிருதி - ஷஃபாலி ஜோடி அதனை தகர்த்தெறிந்தது.
pallivasalmurasu.wpcomstaging.com
SIR-க்கு எதிராக முழு வீச்சில் தமிழகம்.! இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.! தேர்தல் ஆணையம் அடங்குமா, அடக்குமா.?

இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்…
SIR-க்கு எதிராக முழு வீச்சில் தமிழகம்.! இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.! தேர்தல் ஆணையம் அடங்குமா, அடக்குமா.?
இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத்திருட்டு சதியில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டின.
pallivasalmurasu.wpcomstaging.com
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை: முதல்வர் அதிரடி உத்தரவு

அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிறுவனமான நந்தினியின் தயாரிப்புகளை வாங்கி கட்டாயம்…
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை: முதல்வர் அதிரடி உத்தரவு
அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிறுவனமான நந்தினியின் தயாரிப்புகளை வாங்கி கட்டாயம் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
pallivasalmurasu.wpcomstaging.com
கிணற்றில் போட்ட கல் போல.. ஆவண எழுத்தர் தேர்வு ஏன் தாமதம்? பத்திரப்பதிவுக்கு நெருக்கடி என பெயிரா கோரிக்கை!

தமிழகத்தில் நீண்டகாலமாக ஆவண எழுத்தர் பற்றாக்குறை கடுமையாக நிலவிவருகிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் தாமதமாவதுடன், அரசுக்கு வரவேண்டிய வருவாய் கூட பாதிக்கப்படுகிறது. இதனை…
கிணற்றில் போட்ட கல் போல.. ஆவண எழுத்தர் தேர்வு ஏன் தாமதம்? பத்திரப்பதிவுக்கு நெருக்கடி என பெயிரா கோரிக்கை!
தமிழகத்தில் நீண்டகாலமாக ஆவண எழுத்தர் பற்றாக்குறை கடுமையாக நிலவிவருகிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் தாமதமாவதுடன், அரசுக்கு வரவேண்டிய வருவாய் கூட பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்யும் நோக்கில், ஆவண எழுத்தர் தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (PAIRA) தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் தேர்வுகள் நடைபெறவில்லை என்பதே முக்கிய பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவுத்துறை 2022ல் வெளியிட்ட அரசாணை எண் 158-ன் படி, ஆவண எழுத்தர் உரிமம் வழங்க தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், மூன்று ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
pallivasalmurasu.wpcomstaging.com
ஆந்திரா: வெங்கடேஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசல் – 10 பேர் பலி, பலர் காயம்

அமராவதி:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்…
ஆந்திரா: வெங்கடேஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசல் – 10 பேர் பலி, பலர் காயம்
அமராவதி:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோவில் ஆந்திரா மட்டுமன்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக தரிசனத்திற்கு வரும் பிரசித்தி பெற்ற தலமாகும். இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். மேலும் விரைவில் கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளதையும், ஏகாதசி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறவுள்ளதையும் முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவில் கூடினர்.
pallivasalmurasu.wpcomstaging.com
“அன்பு காட்டுங்க… ஆனால் பாதுகாப்பாக!” — ரசிகர்களுக்கு அஜித்தின் முக்கிய அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் முதல்நாள் முதல் காட்சியில் (FDFS) ரசிகர்கள் காட்டும் அதீத உற்சாகத்துக்கு இனி ஆதரவு அளிக்கக் கூடாது என்று நடிகர் அஜித் குமார் உறுதியான முறையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர்,…
“அன்பு காட்டுங்க… ஆனால் பாதுகாப்பாக!” — ரசிகர்களுக்கு அஜித்தின் முக்கிய அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டில் முதல்நாள் முதல் காட்சியில் (FDFS) ரசிகர்கள் காட்டும் அதீத உற்சாகத்துக்கு இனி ஆதரவு அளிக்கக் கூடாது என்று நடிகர் அஜித் குமார் உறுதியான முறையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர், “இது சினிமாவின் பெருமையை குறைக்கும் செயல்” என வலியுறுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அஜித்தின் பேட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் பணிகளை முடித்தபின், தற்போது அவர் தனது ரேசிங் குழுவில் (Racing Team) தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
pallivasalmurasu.wpcomstaging.com
அஜித்: “என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!” — ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் வெளிச்சம்

சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான ஆளுமை, எளிமை மற்றும் நேர்மையான பேச்சுக்காக ரசிகர்களால் “தல” என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையின்…
அஜித்: “என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!” — ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் வெளிச்சம்
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான ஆளுமை, எளிமை மற்றும் நேர்மையான பேச்சுக்காக ரசிகர்களால் “தல” என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றியின் பின்னால் உள்ள சக்தி, அவரது மனைவி ஷாலினி தான் என்று அஜித் பெருமையுடன் கூறியுள்ளார். அஜித்தின் நெகிழ்ச்சியான வார்த்தைகள் “நான் ஷாலினிக்குக் கடமைப்பட்டவன். ரேஸிங்கிலும், சண்டைக் காட்சிகளிலும் நேரடியாக பங்கேற்கிறேன். என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதல்ல. ஆனாலும் ஷாலினி எப்போதும் எனக்கு துணையாக இருந்துள்ளார். அவர் இல்லாமல் என் வாழ்க்கை சாத்தியமாகியிருக்காது.”
pallivasalmurasu.wpcomstaging.com
“கூட்ட நெரிசலுக்கு ஒரே நபர் காரணமல்ல” – அஜித் கருத்துக்கு தவெக தரப்பில் நன்றி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் அளித்த கருத்து, அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அஜித் குமார், “கரூரில்…
“கூட்ட நெரிசலுக்கு ஒரே நபர் காரணமல்ல” – அஜித் கருத்துக்கு தவெக தரப்பில் நன்றி!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் அளித்த கருத்து, அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அஜித் குமார், “கரூரில் நடந்த கூட்ட நெரிசலுக்கு ஒரே நபரை மட்டும் குறை சொல்ல முடியாது. நாமெல்லாரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் கூட்ட நெரிசலை பெருமைப்படுத்தும் கலாச்சாரத்தில் மூழ்கி விட்டோம். இது நிறுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: “கிரிக்கெட் போட்டிகளிலும் பெரிய அளவிலான கூட்டம் வரும், ஆனால் அங்கெல்லாம் இப்படிப்பட்ட விபத்துகள் நடப்பதில்லை.
pallivasalmurasu.wpcomstaging.com
வங்கிக் கணக்கு விதிமுறையில் பெரும் மாற்றம் — இனி 4 வாரிசுகளை நியமிக்கலாம்!

உரிமை கோரப்படாத வங்கி பணம் இனி குடும்பத்தினருக்கே செல்லும் — இன்று முதல் புதிய நடைமுறை அமலில் சென்னை:நவம்பர் 1 முதல், இந்தியாவின் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்புப் பொருளுக்கு…
வங்கிக் கணக்கு விதிமுறையில் பெரும் மாற்றம் — இனி 4 வாரிசுகளை நியமிக்கலாம்!
உரிமை கோரப்படாத வங்கி பணம் இனி குடும்பத்தினருக்கே செல்லும் — இன்று முதல் புதிய நடைமுறை அமலில் சென்னை:நவம்பர் 1 முதல், இந்தியாவின் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்புப் பொருளுக்கு அதிகபட்சம் 4 பேரை வாரிசுகளாக (Nominees) நியமிக்கலாம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வாடிக்கையாளர் மரணம் அல்லது கணக்கைச் சம்பந்தப்படுத்த முடியாத சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு பணம் அல்லது சொத்துக்களை எளிதாகப் பெற உதவும் விதமாக அமைகிறது. ஏன் இந்த மாற்றம் அவசியம்? பலரும் வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புத் தொகைகள் (Fixed Deposits), அல்லது லாக்கர்களைத் துவங்கும் போது ஒரே ஒருவரையே நியமிக்கிறார்கள்.
pallivasalmurasu.wpcomstaging.com
கரூரில் கூட்ட நெரிசல் விபத்து – வேலுச்சாமிபுரத்தில் 2வது நாளாக சிபிஐ தீவிர விசாரணை!

கரூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த…
கரூரில் கூட்ட நெரிசல் விபத்து – வேலுச்சாமிபுரத்தில் 2வது நாளாக சிபிஐ தீவிர விசாரணை!
கரூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பிரவீன் குமார் தலைமையில் இயங்கும் சிபிஐ குழு, நேற்று முதல் வேலுச்சாமிபுரத்தில் நேரடி ஆய்வு மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. நேற்று, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட பலர் விசாரணைக்கு ஆஜரானனர்.
pallivasalmurasu.wpcomstaging.com
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமா போச்சா? இதோ சூப்பர் டிப்ஸ்!

சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக தண்ணீர் அதிகமாகி விட்டதா? கவலைப்பட வேண்டாம் — இதோ அதை சரி செய்வதற்கான சில அற்புதமான டிப்ஸ்! வடை என்றால் ரசிக்காதவர்கள் அரிது. குறிப்பாக, மசால் வடையை விட உளுந்து வடை…
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமா போச்சா? இதோ சூப்பர் டிப்ஸ்!
சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக தண்ணீர் அதிகமாகி விட்டதா? கவலைப்பட வேண்டாம் — இதோ அதை சரி செய்வதற்கான சில அற்புதமான டிப்ஸ்! வடை என்றால் ரசிக்காதவர்கள் அரிது. குறிப்பாக, மசால் வடையை விட உளுந்து வடை பலரின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. புசுபுசு என உப்பி சாப்பிடும் உளுந்து வடை சுவையில் தனி ருசி உண்டு. உளுந்து மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து செய்வது ஒரு வழி. சிலர் மிளகை முழுதாகவே போட்டு சுடுவார்கள் – அந்த முறையிலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.
pallivasalmurasu.wpcomstaging.com
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா — முதல் முறையாக சாம்பியன் பட்டம் நோக்கி வரலாறு படைக்கப் போகும் அணி!

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய மகளிர் அணி மற்றும்…
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா — முதல் முறையாக சாம்பியன் பட்டம் நோக்கி வரலாறு படைக்கப் போகும் அணி!
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதவிருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை கைப்பற்றாததால், இந்த முறை புதிய சாம்பியன் பிறக்கப் போகிறது என்பது சிறப்பாகும். இந்திய அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பெரிய இலக்கை இந்தியா வெற்றிகரமாக அடைந்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
தான்சானியாவில் அதிர்ச்சி வன்முறை: 700 பேர் பலி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

டொடோமா:கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வெடித்த வன்முறை, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவதன்படி, கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்டோர்…
தான்சானியாவில் அதிர்ச்சி வன்முறை: 700 பேர் பலி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
டொடோமா:கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வெடித்த வன்முறை, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவதன்படி, கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அந்த நாடில் அக்டோபர் 29ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபரான சமியா சுலுஹூ ஹசன் (CCM கட்சி) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சி சடேமா, “தேர்தலில் மோசடி நடந்தது” என குற்றஞ்சாட்டி, முடிவை நிராகரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் …
pallivasalmurasu.wpcomstaging.com
அதிமுகவில் அதிர்ச்சி! நீக்கத்துக்கு பின் செங்கோட்டையன் வெளியிடும் ‘அணுகுண்டு’ ஆடியோ – குள்ளம்பாளையத்தில் பரபரப்பு!

கோபிச்செட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு முக்கியமான ஆடியோ…
அதிமுகவில் அதிர்ச்சி! நீக்கத்துக்கு பின் செங்கோட்டையன் வெளியிடும் ‘அணுகுண்டு’ ஆடியோ – குள்ளம்பாளையத்தில் பரபரப்பு!
கோபிச்செட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு முக்கியமான ஆடியோ பதிவையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவரது இல்லத்தில் பிரத்யேக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பசும்பொன்னில் செங்கோட்டையன் கை கோர்த்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இன்று காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறேன்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
pallivasalmurasu.wpcomstaging.com
வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: இன்று முதல் நடைமுறை – ஆழியார் செக் போஸ்டில் தீவிர சோதனை

கோவை:பிரபல மலைப்பகுதி சுற்றுலா தலமான வால்பாறையில் இன்று (நவம்பர் 1) முதல் இ-பாஸ் (E-Pass) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான தீவிர…
வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: இன்று முதல் நடைமுறை – ஆழியார் செக் போஸ்டில் தீவிர சோதனை
கோவை:பிரபல மலைப்பகுதி சுற்றுலா தலமான வால்பாறையில் இன்று (நவம்பர் 1) முதல் இ-பாஸ் (E-Pass) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இ-பாஸ் இல்லாமல் வால்பாறைக்கு எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுறை — நீதிமன்ற உத்தரவின் பேரில்ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே, கோவை மாவட்டத்தின் வால்பாறைக்குச் செல்லும் பயணிகளுக்கும் இ-பாஸ் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆழியார் சோதனைச் சாவடி அருகே சுற்றுலா பயணிகள் வசதிக்காக …
pallivasalmurasu.wpcomstaging.com